/* */

திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்தனர் .

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்ட குடிமை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பிரதான சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூரிலிருந்து வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் சுமார் 1 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை விசாரணை செய்ததில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மிட்டா, கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ், 32, என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 May 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!