/* */

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
X

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக "நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தியும், மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும், பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நடைப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலையின் அருகே முடிவுற்றது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பட்டாபிராம் இந்து கல்லூரி மற்றும் துவக்கம் தொண்டு நிறுவனம் ஆகியவற்றிக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூ. 2 இலட்சத்திற்கான காசோலைகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கே.ரகு குமார், எஸ்.சபரிநாதன், திருமூர்த்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் டி.மணிமேகலை, பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2023 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...