/* */

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
X

திருவள்ளூர அருகே நடந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

அரசு பள்ளியில் மாணவ மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக அவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 280 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் பயின்றுவரும் மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே 1முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசே விலையில்லா சீருடை வழங்கும் நிலையில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் சுமார் 75 பேருக்கு ஆதவா அறக்கட்டளை சார்பில் மனிதநேயர் பாலகுமரேசன் சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு என்னவென்றால் முக்கால் பேண்ட் அணிய கூடாது என்ற வகையில் தையல்காரரை பள்ளிக்கே வரவழைத்து அளவெடுத்து மாணவ மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் இரவு காவலர் மாத ஊதியம் ரூ. 5,000/- என்ற வீதத்திலும் , தூய்மை பணியாளர் ஒருவர் மாத ஊதியம் ரூ. 3,000/- என்ற வீதத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர் என விழாவில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 96 மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் இரு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர் என தெவித்ததன் அடிப்படையில் மாத ஊதியம் ரூ. 6000/- என்ற வீதத்தில் ஆசிரியர்களையும் , பள்ளி வளாகம் பெரிய அளவில் இருப்பதால் மேலும் ஒரு தூய்மை பணியாளரை நியத்துக் கொள்ள இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராஜம்மா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்றார் .உதவி தலைமை ஆசிரியர் பாகிரதி சாரதி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் திலகம் , ஆசிரியர்கள் மகாலட்சுமி,பாஸ்கர்,ஷீலா, கலியபெருமாள், லதா, கல்பனா, மரிய சுந்தரி , பூங்கோதை, சத்துணவு அமைப்பாளர் கவிதா மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் , முடிவில் ஆசிரியர் கோபிநாத் நன்றி கூறினார்.

Updated On: 24 Nov 2022 8:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?