Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூரில் லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றபோது திடீரென அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார். இறந்த நபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.