திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்
Committee Meeting -திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Committee Meeting -திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி உத்தரவின் பேரில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆலோசனைப்படி திருத்தணி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் (எ) குமார் தலைமையில் புச்சிரெட்டிப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய உறுப்பினர் படிவங்கள் நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன் வழங்கினார். விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவைல் அதிக அளவில் நிர்வாகிகள் பங்கேற்பது, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, இளைஞர்கள், மற்றும் இளம் பெண்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர்கள் டி.இராமதாஸ், வேலாயுதம், சுசீலா, பொருளாளர் என்.பரந்தாமன், மாவட்ட பிரதிநிதிகள் செ.நரசிம்மராஜ், கே.கோவர்த்தனம், இ.கண்ணப்பன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மிதுன் சக்கரவர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.கோதண்டன், இலக்கிய அணி பா.டில்லிபாபு, ஊராட்சி மன்றத் தலைவர் பி.வளர்மதி குமார், ஒன்றிய கவுன்சிலர் பி.ஜி. நீலா கோவிந்தசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2