/* */

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் சாரதாம்பாள் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாக்கியவதி. இவர் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வழக்கம் போல் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு புறப்பட்டு சென்றனர்.

பணி முடித்துவிட்டு மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டி இருந்த பூட்டை உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி,மணிகள் பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவின் அறையை உடைத்து அதில் இருந்த 15.சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 45 ஆயிரம் ரொக்க பணம் மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக மணவாள நகர் காவல் நிலையத்தில் பாக்கியவதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடையங்களை சேகரித்து. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகினறனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் கொள்கைக்கு காரணமான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சாரதாம்பாள் நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 18 March 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!