/* */

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே ரயில்வே ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை:  போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பெருமாள் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் பாபு (57). இவர் ரயில்வே துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணமாகி அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மகளை பார்க்க கணவன், மனைவி இருவரும் சென்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அறையில் இருந்த தங்க கம்மல், செயின், மோதிரம், ஒரு டேப் 10 சவரன் தங்க நகைக,ள் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் பூஜை அறையில் இருந்த இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாபு திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை மலை வீச்சு தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...