/* */

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மகன்: தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த புது இருளன்செரியை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன் இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் மகனும் உள்ளன.

இந்த நிலையில் ஜெயராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன நிலையில் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இவரது மகன் மோகன்(23) பள்ளி படிப்பு முடித்துவிட்டு கிடைக்கின்ற வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் சில மாதங்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாத காரணத்தினால் மோகன் தாய் சித்ரா மோகனை கண்டித்துள்ளார்.

தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த மோகன் வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் தன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார், மோகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 May 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்