/* */

புழல் சிறையில் பெண் கைதிகளுக்காகவே தனி பெட்ரோல் பங்க் : அமைச்சர் ரகுபதி

விடுதலையாகி வெளியே செல்லும் போது பட்டதாரியாகவோ, +2 முடித்தவராகவோ, தொழில் கல்வி முடித்தவராகவோ ஆகும் நிலை உள்ளது

HIGHLIGHTS

புழல் சிறையில் பெண் கைதிகளுக்காகவே தனி பெட்ரோல் பங்க் : அமைச்சர் ரகுபதி
X

புழல் மத்திய சிறையில் 40பெண் கைதிகள் மாதம் 6ஆயிரம் ரூபாய் ஊதியம் ஈட்டும் வகையில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் சிறைத்துறை சார்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சிறைத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.

சென்னை புழல் மத்திய சிறையின் அருகே பெண் கைதிகள் பணியாற்றுவதற்காக இரண்டாவது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரியுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புழல், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய 5இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக புழல், கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 5இடங்களில் புதியதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய அம்சமாக புழலில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் பகல் நேரத்தில் முழுவதுமாக பெண் கைதிகள் மட்டுமே பணியாற்ற உள்ளனர். பகல் நேரத்தில் 40பெண் கைதிகள் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்ற உள்ளனர். இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 6ஆயிரம் அவர்களது குடும்பத்திற்கு பெண் கைதிகள் அனுப்ப முடியும் .

சிறைத்துறை சார்பில் சிறைக்குள் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறைச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் கைதிகளும் தங்களது ஊதியத்தை குடும்பத்திற்கு பயன்படும் வகையில் அனுப்பி வருகின்றனர்.

சிறைவாசிகள் சிறைக்குள் இருந்தாலும் பல்வேறு பணிகளின் மூலம் தங்களது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் பணம் சம்பாதிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறைத்துறை முறையாக சோதனைகளை மேற்கொண்டு வருவதால் தான் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகள் காரணமாக கைதிகளால சிறை காவலர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். என்னும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் தங்களது உயிரையும் பணயம் வைத்து சிறை காவல்கள் சீரிய முறையில் தங்களது கடமையாற்றி சிறைகளை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.

சிறைக்குள் கொண்டு வருவதை முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து சோதனைகளும் நடத்தப்படும் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கைதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. சிறை காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு அளிக்கும் . கடலூரில் சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சிறைக்காவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் கைதியின் தண்டனை காலத்தை நீட்டித்து தண்டனை வழங்கும் .

இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை முதலிடம் (நம்பர் 1 ) என்ற நற்சான்றிதழ் பெற்றிருக்கிறது. கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகள் தகுதி கண்டறியப்பட்டு அதற்குண்டான வேலை வழங்கப்பட்டு வருகிறது.

புத்துணர்ச்சிக்காக, விளையாட்டு, நூலகம், கல்வி வழங்கப்பட்டு தற்போது புழல் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொழிற்கல்வி மட்டுமின்றி, திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் சிறை கைதிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். சிறைக்குள் வரும் கைதி விடுதலையாகி வெளியே செல்லும் போது பட்டதாரியாகவோ, +2 முடித்தவராகவோ, தொழில் கல்வி முடித்தவராகவோ வெளியே செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


Updated On: 27 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!