/* */

திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி

திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே அடகு கடையில் போலி நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி
X

போலி தங்க நகை.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு சத்திரம் கிராமப்பகுதியில் அசோக்குமார் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவரது அடகு கடைக்கு மணி, முருகன் ஆகியோர் வந்து தங்க சங்கிலி விற்க வேண்டும் என கூறி தங்க வர்ணம் பூசிய கவரிங் நகையை அசோக்குமாரிடம் கொடுத்து விட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு 2 பேரும் அங்கிருந்து சென்றனர்.

அசோக்குமார் அந்த நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியான கவரிங் செயின் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து அசோக் குமார் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த முருகனை கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் மோசடியில் ஈடுபட்ட மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 9 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு