விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் என மொத்தம் 456 பயனாளிகளுக்கு 3.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.451 பயனாளிகளுக்கு 3.47 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில். மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பாக 451 பயனாளிகளுக்கு 3.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தாட்கோ சார்பாக 5 பயனாளிகளுக்கு சுய தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வங்கி கடனுதவியோடு அரசு மானியம் உட்பட 18.07 லட்சம் மதிப்பீட்டிலான ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் என மொத்தம் 456 பயனாளிகளுக்கு 3.65 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.