/* */

மோட்டார் சைக்கிள் மீது மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

Bike Accident Today- பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியதில் மின்வாரிய ஊழியர் தூக்கி வீசப்பட்டார்.

HIGHLIGHTS

மோட்டார் சைக்கிள் மீது மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர்  பலி
X

பைல் படம்.

Bike Accident Today-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேடு பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ். இவர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பொன்னேரி அருகே உள்ள ஆரணி அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மாலை யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தபோது பொன்னேரி-பஞ்செட்டி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் யுவராஜ் தூக்கி வீசப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் யுவராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Jun 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!