/* */

திருவள்ளூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

51 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

மக்களுக்கு விரைவாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களாம்பாக்கம் ரவி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

திருவள்ளூர் அருகே 51பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் தாமதம் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் இந்து ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட களாம்பாக்கம் ஊராட்சியில் 65 ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் வாயிலாக அரசுக்கு தெரிவித்து வந்த நிலையில் அதே பகுதியில் 51 ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக தாமதம் காட்டி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே இந்த மக்களுக்கு விரைவாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களாம்பாக்கம் ரவி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

Updated On: 23 Aug 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...