/* */

அரிசி ஆலையில் அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த விபத்து நடந்துள்ளது

HIGHLIGHTS

அரிசி ஆலையில் அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி  உயிரிழப்பு
X

அரிசி ஆலையில் உயிரிழந்த பீகாரை சேர்ந்த தொழிலாளி காளிமுக்யா

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பீகாரை சேர்ந்த காளிமுக்யா என்ற தொழிலாளி தனது பணிகளை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து காளிமுக்யா மீது விழுந்ததில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த சக தொழிலாளர்கள் காளிமுக்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Updated On: 3 Sep 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?