/* */

மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் குளக்கரையில் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்: முன்னோகளுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடுகள் செய்தும் வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது பிரசித்தி பெற்றது ஸ்ரீ வைத்திய வீரராகப் பெருமாள் கோயில். இக்கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதும், கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதும் வழக்கம்மாகும்.

மேலும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில், விசேஷமாக மக்கள் வீரராகவப் பெருமாளை தரிசித்து விட்டு அங்குள்ள குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பம் கொடுத்தால் முன்னோர்கள் தங்களை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அதன்படி இன்று மகாளய அமாவாசை என்பதால் திருவள்ளூர் திருவள்ளூர் சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இருந்தும் மற்றும் வேலூர், காஞ்சிபுரம்,சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் வந்து அருகிலுள்ள குளக்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குளத்தில் நீராடி பின்னர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் நோயை தீர்க்கும் வல்லவராக திகழும் வீரராகவப் பெருமாளுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோயில் குளத்தில் வெள்ளம், பால் ஆகியவற்றை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் சுற்றி பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பும், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளும் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைத்திய வீரராகப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இந்தக் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் மூலவர், வைத்திய வீரராகப் பெருமாள் ஆவார். இவர், குழந்தை வரம், நோய் நீக்கம் போன்றவற்றை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயில், 1000 ஆண்டுகளுக்குப் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் தலபுராணத்தின்படி, சாலிஹோத்திரர் என்ற முனிவர், இங்கு தவம் இருந்தார். அவருக்கு ஒரு நாள், ஒரு வயதான அந்தணர் வந்து, தனக்கு உணவு கொடுக்கும்படி கேட்டார். சாலிஹோத்திரர், தனக்கு ஒரு பங்கு உணவு மட்டுமே இருந்ததால், அதை அந்தணருக்குக் கொடுத்தார். அந்தணர், உணவை உண்ட பிறகு, சாலிஹோத்திரரின் பசியைப் போக்குவதற்காக, தனது கைகளை நீட்டினார். அந்தணரின் கைகளில் இருந்து, அமிர்தக் கிண்ணம் ஒன்று தோன்றியது. அந்தக் கிண்ணத்தில் இருந்து, சாலிஹோத்திரர் உண்ட பிறகு, அவருக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, வைத்திய வீரராகப் பெருமாள் என்று பெயரிட்டார்.

இந்தக் கோயிலின் கருவறையில், வைத்திய வீரராகப் பெருமாள், தன் மனைவி கனகவள்ளியை மடியில் அமர்த்தி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரின் மேல், திரிபுரசுந்தரி அமர்ந்துள்ளார். இவரின் வாகனம், யானை.

இந்தக் கோயிலின் தீர்த்தம், ஹிருதாபநாசினி ஆகும். இந்தத் தீர்த்தம், நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயில், ஆண்டுக்கு ஒரு முறை, மாசி மாதம் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

Updated On: 14 Oct 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!