அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநரை கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காத லாரி ஓட்டுநர் கொலை: நண்பன் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரகாஷும் 28, கன்னிகைபேர் அருகே தர்மபுரம் கண்டிகையை சேர்ந்த சக லாரி டிரைவரான சூர்யாவும், நண்பர்களாக இருந்து வந்தனர்.

நேற்று காலை பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சவுடு மண் குவாரியில் சவுடு மண் ஏற்றுவதற்காக இருவரும் தங்களது லாரிகளில் சென்றுள்ளனர். குவாரி அலுவலகத்தில் ரசீது வாங்குவதற்காக காத்திருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சூர்யா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷை சரமாரியாக வெட்டி விட்டு லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். பிரகாஷ் வெட்டுக்காயத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் பிரகாஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சக டிரைவரை கொலை செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் சூர்யாவை தேடி வந்தனர்.

தீவிர விசாரணையில் சோழவரம் அருகே சோலையம்மன் நகரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை பெரியபாளையம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிரகாஷ் தன்னுடைய தேவைக்காக சூர்யாவிடம் அரை சவரன் நகையை வாங்கி அடகு வைத்ததாகவும் சுமார் 2ஆண்டுகளாகியும் அதனை மீட்டு திருப்பி தராததால் இது தொடர்பாக சூர்யாவிற்கும் பிரகாஷிற்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும் நகையை திருப்பி கொடுக்காத பிரகாஷ் சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், நேற்று குவாரியில் சந்தித்த போதும் திட்டியதால் ஆத்திரத்தில் பிரகாஷை மிரட்டுவதற்காக கத்தியால் வெட்டியதாகவும், தலையில் பலமாக வெட்டு பட்டு பிரகாஷ் உயிரிழந்துவிட்டதாக சூர்யா காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து சூர்யாவை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியபாளையம் காவல்துறையினர் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நண்பனை கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொலையாளியை 24மணி நேரத்தில் கைது செய்த பெரியபாளையம் காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Updated On: 27 May 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்