/* */

திருவள்ளூரில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த 10 ஷவர்மா கடைகளுக்கு தலா ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்காெண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த 10 ஷவர்மா கடைகள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலா 2000 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேரளாவில் ஷவர்மா உட்கொண்டதால் மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தஞ்சையிலும் சவர்மா சாப்பிட்ட மூன்று பேர் மயக்கம் அடைந்ததால் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகள் சிக்கன் கடைகளில் தரமற்ற முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், மணவாளநகர், திருவெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரி கடந்த 3 நாட்களாக 60க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்ததில் தரமற்ற நிலையில் ஷவர்மா கடைகள் சிக்கன் வைத்திருந்ததை கண்டறிந்து

10 கடைகள் மீது தலா 2,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.தொடர்ந்து இதுபோன்று தரமற்ற நிலையில் செயல்படும் ஷவர்மா கடைகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Updated On: 7 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  6. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  7. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  8. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு