/* */

பெரிபாளையம் அருகே ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா

பெரிபாளையம் அருகே ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

HIGHLIGHTS

பெரிபாளையம் அருகே  ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா
X

தீ மிதித்த பக்தர்கள்.

பெரியபாளையம் அருகே வானியஞ்சத்திரம் கிராமத்தில் ஏகாத்தம்மன் ஆலய 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 500பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வானியஞ்சத்திரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயம் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் கிராம மக்களின் பங்களிப்புடன் கடந்த 20.ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கோவிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆலயத்தின் 15.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடி ஏற்றும் கங்கை நீர் திருட்டுதல், கூழ் வார்த்தல், பெண்கள் பால்குடம் எடுத்து, மேல தாளம் முழங்க ஊர்வலமாக வந்து ஸ்ரீ ஏகாத்த அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர் பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 30.தேதி அன்று சென்னை திருப்போரூர் அருள்மிகு கந்தப் பெருமானுக்கு திருநீற்று பாலாபிஷேகமும், புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.


இதனையடுத்து கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் ஆலய வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து படையல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.1ஆம் தேதி அன்னதானமும் நடைபெற்றது. 2.ம்தேதி பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் கரகம் ஊர் எல்லையை சுற்றி வருதல் நிகழ்ச்சியும்,3 ஆம் தேதி அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வரும் நிகழ்ச்சியும்,4 ஆம் தேதி அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தல் அம்பாள் தனது அடியார்களுக்கு தீமிதித்தல் எனும் பூ குண்டத்தில் திரு நடனம் புரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடைசி நாளான 5ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, குங்குமம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை காப்பு கட்டி விரதம் இருந்த 500பக்தர்கள் நேற்று மாலை ஆலயம் அருகே புனித நீராடி காத்திருந்தனர். அவர்களை அம்மன் சென்று ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 5 Jun 2023 6:37 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!