Begin typing your search above and press return to search.
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியோர் மீது ரயில் மோதி பலி
Recent Train Accident- திருவள்ளூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
HIGHLIGHTS
Recent Train Accident-திருவள்ளூர் மாவட்டம்-ஏகாட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் கடக்க முயன்ற போது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2