/* */

திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம்

திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம்
X

காலில் காயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி காட்டில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் ஒன்று திருப்பாச்சூர் அருகே சுற்றி கொண்டு இருந்தது. அந்த மான் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில் அமைத்திருந்த இரும்பு வேலியில் சிக்கிக்கொண்டது. இதில் அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அந்த புள்ளிமான் வலியால் துடித்து நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து காயத்துடன் தவித்த புள்ளிமானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த மானை திருவள்ளூரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்முறிவு சரியானதும் புள்ளிமான் மீண்டும் காட்டில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


Updated On: 6 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...