புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டதால் சேதம்
Tiruvallur News -புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டதால் நீர் மூழ்கி மின்சார மோட்டார் சேதம் அடைந்துள்ளது.
HIGHLIGHTS
Tiruvallur News -கோடை காலம் குடிநீர் பிரச்சனையை போக்க திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஏழுமலை சார்பில் மெய்யூர் ஊராட்சியில் நாகேரி ஏரிக்கரை அருகே ரூ.3.5 லட்சம் செலவில் ஒரு ஆழ்துளை கிணறும்,அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே ரூ.3 லட்சம் செலவில் ஒரு ஆழ்துளை கிணறும் என மொத்தம் இரண்டு ஆழ்துளை கிணறுகள் தலா 160 அடி ஆழத்தில் நேற்று முன்தினம் மாலை அமைக்கப்பட்டது. இதில்,நீர் மூழ்கி மோட்டார்கள் அமைக்க நேற்று ஊராட்சிமன்ற செயலர் டில்லிபாபு தலைமையில் பணியாளர்கள் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் பெரிய, பெரிய கூழாங்கருங்கல்லை போட்டு சேதப்படுத்தி இருந்தனர்.இதனால் நீர் மூழ்கி மோட்டார்களை அமைக்க இயலவில்லை. இதன் பின்னர்,ஆழ்துளை கிணறுகளில் இருந்த கற்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதில்,அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்த கல்லை அகற்றிவிட்டு மின் மோட்டார் அமைக்கும் பணியை நேற்று மேற்கொண்டனர்.நாகேரி ஏரிக்கரை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்த கற்களை அகற்றும் பணியை ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன .இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2