திருவள்ளூரில் பஞ்சாப் அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பிரதமருக்கு முறையான பாதுகாப்பு தரவில்லை என பஞ்சாப் அரசை கண்டித்து திருவள்ளூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் மாநாட்டிற்காக சாலை வழிப் பயணமாக காரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் நெரிசலில் சிக்கி 20 நிமிடங்கள் தாமதமானதால் மாநாடு பயணத்தை ரத்து செய்து அலுவலகத்துக்குச் திரும்பினார்.
இந்நிலையில் பிரதமர் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சி.வி.என் சாலை யின் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மனித சங்கிலி அமைத்து பிரதமருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாத பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் பிரதமரின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பஞ்சாப் அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி கைகளில் பதாகைகள் துண்டு பிரசுரங்கள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.