நாளை,பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி விழா தொடக்கம்
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆடி விழா நாளை தொடங்குகிறது.
HIGHLIGHTS
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா நாளை தொடக்கம். திருவிழாவை முன்னிட்டு பவானி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை பவானியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை ஜூலை 17.ம் தேதி) துவங்குகிறது. மேலும் இரண்டு வருட காலங்களாக கொரோனா தொற்று காரணத்தினால் கோவிலில் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பக்தர்களுக்கு அம்மனை தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து சனி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மட்டுமல்லாமல் நாள்தோறும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் நாளை17 ஆம் தேதி அன்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆடி திருவிழா தொடங்க இருக்கும் நிலையில் கடந்த 15 ஆம் தேதி அன்று கோவிலில் கோ பூஜை நடந்தது. மூலவர் சுயம்பு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து நாளை 17 தேதி அன்று 12 மணி அளவில் மூலவர் சுயம்பு அம்மனுக்கு நவகலச பூஜை விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலத்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கோவில் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் அடிப்படை வச உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்து தரப்பட்டுள்ளது .