/* */

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
X

திருவள்ளூர் மாவட்டம் புட்லுார் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீதர். இவருக்கு சாருகேஷ் (வயது17),என்கிற மகன் இருந்தார். இவர் 11 வகுப்பு படித்து வந்தார்.நேற்று மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றான்.

பின்னர் அங்குள்ள தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாத காரணத்தினால் திடீரென தண்ணீரில் . முழுகி காணாமல் போனான். அப்பகுதியில் உள்ளவர்கள் தகவலறிந்து கிணற்றில் குதித்து நீண்ட நேரம் தேடி மாணவனை மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர் மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவனின் உடலை கீழச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த மப்பேடு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 May 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்