/* */

செவ்வாப்பேட்டை பாலத்திற்கு 10 வருடத்துக்கு பின் தீர்வு, மக்கள் மகிழ்ச்சி

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பாலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பின்பு தீர்வு கிடைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

HIGHLIGHTS

செவ்வாப்பேட்டை பாலத்திற்கு 10 வருடத்துக்கு   பின் தீர்வு, மக்கள் மகிழ்ச்சி
X
பைல் படம்

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் மக்களின் பயன்பாட்டிற்காக உள்ள பாலமானது மிகவும் குறுகலாக உள்ளதாகவும், மேலும் அதனை சீரமைத்து தரும்படியும் பல்வேறு கோரிக்கைகளை செவ்வாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி அன்பு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் அரசு சார்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட செவ்வாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு பாலத்தை விரிவுபடுத்தி சீரமைத்து தரும்படி மனு ஒன்றை அளித்தார்.

இதனை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், அது சம்பந்தமான அதிகாரிகளுக்கு கட்டளையிட்டத்தின் பேரில் இறுதிக்கட்ட ஆய்வு பணிக்காக நீர்வளத் துறை பொறியியல் அதிகாரி ஜார்ஜ் மற்றும் துணை பொறியியல் அதிகாரி பழனிகுமார் மற்றும் சண்முகம் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு ஆகியோர்கள் அது சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பாலம் கட்டுவதற்கான அளவைக் குறித்துக் கொண்டு மற்றும் அதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

இந்த நிகழ்வின் ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை ஆகியோர்கள் உடனிருந்தனர். பாலம் கட்டுவதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கப்படும்.

இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 21 July 2021 6:09 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e