/* */

பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள நிலையில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி வியாபாரிகளுடன், அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கடை வாசலில் பொதுமக்கள் நிற்க வட்டமிடுதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி வழங்குதல், குளிர் சாதன பெட்டி இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் அரசு அறிவித்த கடைகள் தவிர்த்து சலூன், ஜவுளி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை. மேலும் உரிய பாதுகாப்புடன் கடைகளை செயல்படுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்கு அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து அதே போன்று செயலில் ஈடுபட்டால் கடையை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 6 Jun 2021 4:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...