/* */

பூந்தமல்லி: சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு..!

பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு.

HIGHLIGHTS

பூந்தமல்லி: சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு..!
X

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மர்ம நபர்கள் நகை திருடும் போது அந்த வீட்டில் இருந்தால் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தினார். இதில் தாய் ஜெயந்தி என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை புழல் சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து பூந்தமல்லி தனி கிளைச் சிறைக்கு அந்தோணி குமார் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அந்தோணி குமார் நேற்று அங்கிருந்த பீங்கானை உடைத்து கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டார். இதையடுத்து சிறை வார்டு முத்துராமன் அந்தோணி குமாரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் விரைந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 Jun 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ஆங்கிலம் இல்லாமல் அதிக சம்பளம் தரும் வேலைகள்
  2. வணிகம்
    50 பேர் சாப்பிடும் பெரிய ஆர்டர்..! இனி Zomato டெலிவரி செய்யும்..!
  3. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  4. நாமக்கல்
    சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள்...
  5. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  6. ஈரோடு
    மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!
  8. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  9. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  10. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...