/* */

நுகர்வோர் செலுத்திய ரூ.28 லட்சம் கையாடல்: மின் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை

நுகர்வோர் செலுத்திய ரூ.28 லட்சம் கையாடல் செய்த மின்வாரிய ஊழியர்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நுகர்வோர் செலுத்திய ரூ.28 லட்சம் கையாடல்: மின் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை
X

படம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மின்நுகர்வோர் கட்டிய ரூ.28 லட்சம் பணத்தை கையாடல் செய்த மின்வாரிய ஊழியர்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறைதண்டனை விதித்து பூந்தமல்லி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பூந்தமல்லி அடுத்த வளசரவாக்கத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மின் கணக்கீட்டு ஆய்வாளராக கணபதி, மின் கணக்கீட்டாளராக சிவப்பிரகாசம், மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது ஆகியோர் பணியாற்றுகின்றனர் .

இவர்கள், கடந்த 2003ம் ஆண்டு பொதுமக்களிடமிருந்து மின்வாரியத்திற்கு பெறப்பட்ட மின் கட்டணம், புது மீட்டர் உள்ளிட்ட ரூ.28.5 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக . இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர், சென்னை மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண தடுப்பு பிரிவில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மின்நுகர்வோர் மின்வாரியத்துக்கு செலுத்திய பணம் ரூ.25 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின், மின்வாரிய ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கணபதிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், சாகுல் ஹமீதுக்கு ஓராண்டு சிறையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருக்கும்போது சிவப்பிரகாசம் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Updated On: 8 Jan 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்