/* */

மேப்பூர்: நலத்திட்ட உதவிகளை வழங்கி, தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்!

மேப்பூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் நல திட்ட உதவிகளை வழங்கி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

மேப்பூர்: நலத்திட்ட உதவிகளை வழங்கி, தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்!
X

பூந்தமல்லி மேப்பூர் ஊராட்சியில் அமைச்சர் சா.மு.நாசர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ள மேப்பூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூவிருந்தவல்லி ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெய்குமார் தலைமையில் 1000 குடும்பங்களுக்கு முககவசம், கிருமி நாசினி மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகை தொகுப்பை பால்வளத்துறை அமைசர் சா.மு.நாசர் வழங்கினார். இதனை சமூக இடைவெளியுடன் பெற்றுக்கொண்டர்.

அப்போது ஒவ்வொருவரிடமும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அமைச்ச்ர பேசுகையில், கொரோனா முதல் அலை சங்கிலி தொடரை அகற்ற ஒராண்டுகள் ஆனது. ஆனால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இரண்டாவது அலை சங்கிலி தொடர் ஒரே மாதத்தில் அகற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் உதாரணமாக நமது முதல்வர் உள்ளார் என்றார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jun 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!