Begin typing your search above and press return to search.
தாமரைப்பாக்கம் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கிய சேர்மேன் ரமேஷ்
தாமரைப்பாக்கம் ஊராட்சியில் தனியார் நிறுவனம் வழங்கிய நிவாரண பொருட்களை ஒன்றிய சேர்மேன் ரமேஷ் 1600 குடும்பங்களுக்கு வழங்கினார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணத்தினால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் இழந்து தவித்த1600 குடும்பங்களுக்கு அமேசான் தனியார் நிறுவனத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் கீதா துளசிராமன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே. ரமேஷ், எல்லாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ௫ கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து பொருட்களை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் நரசிம்மன், மற்றும் அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலர் நித்யா செல்வம் நன்றி கூறினார்.