சேத்துப்பாக்கம் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் : சேர்மேன் ரமேஷ் வழங்கல்
சேத்துப்பாக்கம் ஊராட்சியில் அமேசான் நிறுவனத்தின் சார்பில் வழங்கிய நிவாரண பொருட்களை ஒன்றிய சேர்மேன் ரமேஷ் வழங்கினார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சேத்துப் பாக்கம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த 450 குடும்பங்களுக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முரளி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் எல்லாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காவியா முருகன். வார்டு உறுப்பினர்கள் ரோகிணி சீனு, அனிதா, தினகரன், விஜயா அரசன், கலா முருகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் தீபலட்சுமி நன்றி கூறினார்.