/* */

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை
X

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மண்பாண்டம் தொழில் செய்யும் செல்வம்(வயது65) .இவரது மனைவி குமாரி(54) இந்த நிலையில் நேற்று மாலை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றிருந்தார்.

நேத்தி கடனை முடித்துவிட்டு பின்னர் இன்று காலை வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9சவரன் தங்க நகை 85 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வம் ஆரணி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் பேரில் வ அங்கு விரைந்து வந்த கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேதி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 July 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  3. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  10. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை