/* */

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை

பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை
X

பைல் படம்.

கடந்த 2001-இல் ஆதிதிராவிட மக்களுக்காக கொசப்பூர் என்ற பகுதியில் அப்போது பொன்னேரி வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது, 139 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அம்பத்தூர் வருவாய் துறையின் கீழ் வரும் நிலையில், அப்போது பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் வர்னிகாஸ்வரி தலைமையில் 4 லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்படும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

2001-இல் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அது தொடர்பான நகல்கள் மட்டுமே இங்கு உள்ளதாகவும், சென்னை குறளகத்தில் அசல் கோப்புகள் உள்ளதாகவும், நகல் கோப்புகளை யாருக்கும் அனுப்ப கூடாது எனவும் கூறி விட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருவாய்த்துறையில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கியது தொடர்பான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Updated On: 30 March 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?