Begin typing your search above and press return to search.
கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு
பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த வினோத் தமது நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளிக்க சென்றார்.
அப்போது திடீரென தோற்றிய அலையில் வினோத் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் வினோத் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்