/* */

பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை…

பொன்னேரி அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.. போலீஸார் விசாரணை…
X

தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் கௌசிக்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி லட்சுமிஅம்மன்கோவில் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் கௌசிக் (20). தாம்பரம் அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு 3 ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல கௌசிக் நேற்று இரவு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை வெகு நேரமாகியும் கௌசிக் வெளியே வராததால் அவரது தாய் கௌசிக்கை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது, கௌசிக் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.

இதைத்தொடர்ந்து, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர், சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கௌசிக்கை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் கௌசிக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனராம்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. அவரது பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கௌசிக் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கௌசிக் பயன்படுத்திய செல்போனை கைப்பறிய போலீஸார் அதில் உள்ள விவரங்கள் மூலம் ஏதேனும் தகவல் கிடைக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்