/* */

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் பலி

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் பலி
X
மீஞ்சூர் அருகே விபத்து நடந்த இடம்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்த நிர்மலா தமது மகன் நரேன்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர் சென்று கொண்டிருந்தார். பட்டமந்திரி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி வேகமாக மோதியது. இதில் தாய், மகன் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரியின் சக்கரம் ஏறி இருசக்கர வாகனம் நொறுங்கியது. கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த தாய் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகன் நரேன்குமார் மீஞ்சூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிப்பர் லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?