/* */

மின்கசிவால் திடீர் தீ விபத்து: மூன்று குடிசை வீடுகள் கருகி சாம்பல்

பொன்னேரி அருகே மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் தீயில் கருகின.

HIGHLIGHTS

மின்கசிவால் திடீர் தீ விபத்து: மூன்று குடிசை வீடுகள்  கருகி சாம்பல்
X

தீப்பிடித்த எரிந்த வீட்டில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியில் திருநங்கைகள் குடியிருக்கும் குடிசை வீடு ஒன்றில் இன்று திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென அருகில் உள்ள இரண்டு குடிசைகளுக்கும் பரவியது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு குடிசைகள் முற்றிலும் எரிந்த நிலையில் தீ பற்றி எரிந்த குடிசையில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் கொண்டு பீச்சி அடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்து கேஸ் சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், புதிய இரு சக்கர வாகனம் என சுமார் 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Jan 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  3. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  9. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது