/* */

பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு விபத்தில் மீனவர் பலி

பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மீன் பிடிக்க சென்ற மீனவர் பலியானார்.

HIGHLIGHTS

பழவேற்காடு முகத் துவாரத்தில் படகு விபத்தில் மீனவர் பலி
X

விபத்தில் பலியான மீனவரின் உடலை கண்டு கதறியழுத்த குடும்பத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த அர்ஜுனன், மீனவர். இவர், தமது படகில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்றார். வங்கக்கடலில் மீன் பிடித்து கொண்டு, பழவேற்காடு முகத்துவாரம் அருகே வந்தபோது, படகு கவிழ்த்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், அர்ஜுனன் கடலில் மூழ்கி மாயமான நிலையில், சக மீனவர்கள் அவரை நீண்ட நேரம் தேடி வந்தனர். சுமார் 8மணி நேரத்திற்கு பிறகு, மீனவர் அர்ஜுனன் சடலம் கரை ஒதுங்கியது. மீனவரின் சடலத்தை கைப்பற்றிய திருப்பாலைவனம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 22 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்