மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைவர் அம்மு சிவகுமார்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநிலை ஊராட்சியில் நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்.
HIGHLIGHTS
திருநிலை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் நிவாரண பொருட்கள் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமப்பகுதியில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தொடர் மழையின் காரணத்தினால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் திருநிலை ஊராட்சிக்குட்பட்ட கொடி பாளையம், திருநிலை காலனி. கவுண்டபாளையம். திருநிலை மேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.
இவ்வாறு தவித்த 600 குடும்பங்களுக்கு தலா 5. கிலோ அரிசி மிகவும் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நலம் விசாரித்து பொருட்களை வழங்கினார்.
அவருடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் தனசேகரன், வார்டு உறுப்பினர்கள் ஆசா பிரதாப், ரேவதி ஜான்சன், பிரகதி பொன்னரசு, பூபதி, கவிதா, வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்