/* */

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்.

ஒருகோடியே பதினேழு லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு ஆறு மாதங்களாகியும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.

HIGHLIGHTS

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து   அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்.
X

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் தவைமையில் அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.நகரில் மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி இருப்பதாகவும் பாதாள சாக்கடை பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் வீதிகளில் மின்விளக்குகள் அமைக்க ஒருகோடியே பதினேழு லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டது.ஆறு மாதங்களாகியும் மின்விளக்குகள் அமைக்கப்பட வில்லை. மேலும் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.இதனை கண்டித்து நகர்மன்ற தலைவர் விஜயகுமார் தலைமையில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று நகர்மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

நகரில் மின்விளக்குகள் எரியாததால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியிருப்பதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் குற்றம் சாட்டினார்.மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆய்வுக்கு வந்தபோது அவரிடம் இந்த பிரச்னைகளை கூறியபோது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டும் எந்த பயனும் இல்லை என குறிப்பிட்டவர் மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியர் இங்கு வரும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என துணைத்தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.


Updated On: 25 May 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...