/* */

சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொலை

சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொலை
X

கொலை செய்யப்பட்ட குழந்தைகள்.

சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர் கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி தப்பியோடினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார். நேற்றிரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தமது மனைவி, குழந்தைகள் காணாமல் போனது கண்டு அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து தமது மனைவி, குழந்தைகளை தேடிக்கொண்டு வந்து பார்த்தபோது குட்டுலு வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஜன்னல் வழியே பார்த்த போது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், அவரது மனைவி சுமிதா பார் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சுமிதா பாரை (21) மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தலையில் காயம், கழுத்தில் வெட்டுக்காயம் என உயிருக்கு ஆபத்தான நிலையில் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட சரத் (4), ரீமா (1) ஆகிய இரண்டு குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் கணவன் துவர்க்கா பாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததால் துவர்க்கா பார் மற்றும் குட்டுலு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணமாகாமல் இருந்த குட்டுலு துவர்க்கா பாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் சுமிதா பார் குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கியும் வாயில் டேப்பில் கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.தொடர்ந்து தமது கள்ளக்காதலியையும் அரிவாளால் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டு கொண்டு அங்கிருந்து குட்டுலு தப்பி ஓடிவிட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

தொடர்ந்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 4தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய பீகாரை சேர்ந்த குட்டுலு என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Feb 2023 6:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!