/* */

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன்(32). விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே புது குப்பத்தை சேர்ந்த சங்கவி (25) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சங்கவி விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த உறவினர்கள் சங்கவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சங்கவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, கணவன் மனைவியிடையே சண்டையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி மூன்று மாதமே ஆன பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 24 Aug 2022 8:11 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்