ஏரியை சுற்றி வேலி அமைக்கப்படுமா? - குமரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை
அஞ்சாத்தம்மன் கோவில் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது மழைக்காலங்களில் இதில் இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் நன்றாக இருக்கும்
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ள அஞ்சாத்தம்மன் கோவில் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் நன்றாக இருக்கும். இந்த நிலையில் இந்த ஏரியின் சுற்றி ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இங்கு இருந்து ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதியில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு சப்ளை செய்து வருகின்றனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ஏரியின் அருகே கொட்டுகின்றனர் இதனால் குப்பை கழிவுகளால் இந்த ஏரியின் தண்ணீரில் கலந்து மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது எனவே ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தும் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை எனவே இந்த ஏரியின் சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.