சென்னை அருகே குமாரபேட்டை ஊராட்சியில் குடிநீர் பைப் உடைந்து வீணாகும் தண்ணீர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
Water Line Pipe - சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் குமாரபேட்டை ஊராட்சியில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி செல்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
Water Line Pipe - குமராபேட்டை ஊராட்சியில் குடிநீர் பைப் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாக ஏரியில் பாய்கிறது .இதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த குமார பேட்டை ஊராட்சியில் சுமார் 4000. மக்கள் வசித்து வருகின்றனர் பேட்டை ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று ராள்ளபாடியில் இருந்து அஞ்சாத்தம்மன் பூவில் பகுதிக்கு செல்லும் ரோடு அருகே ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது ஏரியின் அருகே ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு இங்கிருந்து பைப்புகள் மூலம் குளிர் குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு அங்கிருந்துபொது மக்களின் குடிநீர் தேவைகளுக்கு காலை மாலை என இருவேளையும் சப்ளை செய்யப்படுகிறது. இதனை அடுத்து ஆழ்துளை கிணறு அருகே உள்ள பைப் ஒன்று உடைந்து நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கானலிட்டர் குடிதண்ணீர் அருகே உள்ள ஏரியில் பாய்ந்து வீணாக செல்கிறது இதனை சரி செய்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2