Begin typing your search above and press return to search.
திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
Ration Shop In Tamil - திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த இருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
Ration Shop In Tamil - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து ஆந்திராவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் பெரியபாளையம் போலீஸ் குடியிருப்பு அருகே தோட்டக்கார் தெருவில் உள்ள வீட்டின் அருகே முட்புதரில் கேட்பாரற்ற நிலையில் சாக்கு பைகளில் கட்டி குவியலாக கிடந்த 20 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை சோதனை செய்தபோது அதில் 2000 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2