/* */

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மற்றும் கைது செய்யப்பட்ட நால்வர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் மாரிமுத்து(25).இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருடைய சொந்த ஊர் மதுரை.

கடந்த மே 25 ம்தேதியன்று தொழிற்சாலை நிர்வாகத்தில் நான் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாரிமுத்து 3 நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் அவருடைய அண்ணன் திருமலை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் மாரிமுத்து காணவில்லை என புகார் மனு அளித்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழு விசாரணையில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து செல்போன எண்ணை வைத்து கடைசியாக திருநெல்வேலி மாவட்டத்தில் சிக்னல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கண்ட போலீசார் திருநெல்வேலிக்கு விரைந்துள்ளனர்.

விசாரணையில் ஏற்கனவே மாரிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்தது தெரியவந்தது. அத்தோடு ராகினிக்கு மாரிமுத்து 5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ராகினி வேறு ஒரு இளைஞருடன் பழகி உள்ளார்.

ஒரு கட்டத்தில் ராகினியின் உறவினர்கள் மதுரைக்குச் சென்று மாரிமுத்து அடிக்கடி தொலைபேசியில் தொந்தரவு செய்கிறார் என தகராறு செய்துள்ளனர். அத்துடன் அவரும் நிறுத்திவிட்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து அடிக்கடி தொலைபேசியில் கொடுத்த பணத்தைப் பற்றி கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராகினியின் நண்பர்களான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி, இசக்கி ராஜா, ரவிக்குமார், வில்வதுரை(காவலர்) , ஆகியோர் உதவியுடன் மேற்கண்ட தேதியில் மாரிமுத்துவை வரவழைத்து சங்கரன்கோவில் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவை கோணியில் கட்டி விருதுநகர் மாவட்டம் கண்மாயில் போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அதிரடியாக மேற்கண்ட 4 நபர்களை கைது செய்து மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 Jun 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்