/* */

பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி அருகே, பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில், திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில்  திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
X

பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்.  

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு மேடு, துரப்பள்ளம், நாகராஜ் கண்டிகை, பெரிய ஓபுளாபுரம் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அரசு நிதி மானியம் பெற்று, பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள், மற்றும் மத்திய அரசு சார்பில் நடைபெறும் 100 நாள் பணிகள் ஆகியவற்றை, நேற்று ஸ்டேட் நேஷனல் கமிட்டி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர் .

அப்பொழுது, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் செவ்வந்தி மனோஜ், துணைத்தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் வேதநாராயணன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வி மன்னார், ஜெயலட்சுமி சம்பத், சிவகாமி குமரகுரு, ராஜா, மோகனப் பிரியா யுவராஜ், சீனிவாசன், எல்லப்பன், ரேகா பழனி, முரளீதரன் என்கின்ற தாஸ், கல்லு முத்து, யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மேற்கண்ட பணிகளை, அதிகாரிகளுக்கு காண்பித்தனர். பின்னர் பணி தொடர்பாக பயனாளிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, குறிப்புகளை குறித்துக் கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 2:45 AM GMT

Related News