தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி எம்எல்ஏ திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல் நிலை குடிநீர் தொட்டியினை எம்எல்ஏ கோவிந்தராஜன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் ரூ. 19.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று துவக்கி வைத்தார்.
தேர்வழி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அங்கு ரூ.19.5லட்சம் மதிப்பீட்டில் 60ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டப்பட்டது. திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா குமார் வரவேறார்.
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், துுணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தேர்வழி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.