/* */

பெரியபாளையம் அருகே மாற்றுக் கட்சினர் 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைவு

பெரியபாளையம் அருகே மாற்றுக் கட்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே மாற்றுக் கட்சினர் 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைவு
X

பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் .பாஸ்கரன் மற்றும் மீனவர் அணி பிரிவு மாநில செயலாளர் பண்ணை. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகவும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வருடந்தோறும 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராஜா மற்றும் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் தியாகு, மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் வேதாசலம் உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு