போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
X

ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாரதி வேலூர் மாவட்டத்திற்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஊத்துக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து வழக்கறிஞர்களுக்கும் இவருக்கும் பல்வேறு சம்பவங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோர்ட்டுக்கு காரில் வரும் வழக்கறிஞர்கள் காரை நிறுத்தக்கூடிய இடம் பிரச்சனை, புகார் தாரர்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது வழக்கறிஞர்களுடன் வரக்கூடாது, புகார் மனுக்களை பொது மக்களுக்கு வழக்கறிஞர்கள் எழுதிக் கொடுத்தாள் அவர்களை ஒருமையில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் அடுத்தடுத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேச சென்றபோது அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாராம். மேலும், ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டு விசேஷத்திற்கு பழங்களை காரில் ஏற்றுக் கொண்டிருந்தாராம். அவ்வழியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தக் காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வழக்கறிஞருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து வழக்கறிஞர்களிடம் முரண்பாடாக நடந்து கொள்ளும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்றும், இன்றும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இவர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் கூறினர். இப்போராட்டத்தால் ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பெண்ணாலூர்பேட்டை காவல் நிலையங்களின் வழக்குகளும், வாய்தாவுக்கு வந்த வழக்குகளும் விசாரணை செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 18 March 2023 2:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    yercaud flower show 2022: இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு...
  2. டாக்டர் சார்
    pentids 400 uses in tamil பல், தோல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    nanban quotes in tamil: நட்பின் அழகையும் முக்கியத்துவத்தையும்...
  4. நாமக்கல்
    தென்னிந்திய தடகள போட்டியில் கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி சாதனை
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைக்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ்
  6. காஞ்சிபுரம்
    பட்டப்பகலில் பைனான்ஸ் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2பேர்...
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய...
  8. காஞ்சிபுரம்
    டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    lotion meaning in tamil லோஷன் என்பது அழகு சாதனப் பொருள்...
  10. காஞ்சிபுரம்
    பைக் சாகச யூடியுபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக...