/* */

போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
X

ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாரதி வேலூர் மாவட்டத்திற்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஊத்துக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து வழக்கறிஞர்களுக்கும் இவருக்கும் பல்வேறு சம்பவங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோர்ட்டுக்கு காரில் வரும் வழக்கறிஞர்கள் காரை நிறுத்தக்கூடிய இடம் பிரச்சனை, புகார் தாரர்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது வழக்கறிஞர்களுடன் வரக்கூடாது, புகார் மனுக்களை பொது மக்களுக்கு வழக்கறிஞர்கள் எழுதிக் கொடுத்தாள் அவர்களை ஒருமையில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் அடுத்தடுத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேச சென்றபோது அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாராம். மேலும், ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டு விசேஷத்திற்கு பழங்களை காரில் ஏற்றுக் கொண்டிருந்தாராம். அவ்வழியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தக் காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வழக்கறிஞருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து வழக்கறிஞர்களிடம் முரண்பாடாக நடந்து கொள்ளும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்றும், இன்றும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இவர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் கூறினர். இப்போராட்டத்தால் ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பெண்ணாலூர்பேட்டை காவல் நிலையங்களின் வழக்குகளும், வாய்தாவுக்கு வந்த வழக்குகளும் விசாரணை செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 18 March 2023 2:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?